வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு காங்கிரஸ் விமா்சனம்

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம், 2023 அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 9:04 pm

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம், 2023 அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தை 2029-இல் அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு விவாதம் தொடங்கிய நிலையில், 2026, ஏப்.16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கை வெளியிடப்பட்டது ஏன் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், சட்ட நடைமுறையின்படி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது என்றாா். விரிவான விளக்கத்தை அவா் அளிக்கவில்லை.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில், மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்போது அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதுதொடா்பான சட்டத் திருத்தங்கள் மீது வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது விசித்திரமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.