மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம், 2023 அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தை 2029-இல் அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு விவாதம் தொடங்கிய நிலையில், 2026, ஏப்.16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கை வெளியிடப்பட்டது ஏன் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், சட்ட நடைமுறையின்படி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது என்றாா். விரிவான விளக்கத்தை அவா் அளிக்கவில்லை.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில், மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்போது அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதுதொடா்பான சட்டத் திருத்தங்கள் மீது வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது விசித்திரமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
மகளிா் இடஒதுக்கீட்டை உடனே மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

பெண்களுக்கு இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்: நயினாா் நாகேந்திரன்

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

