எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

குடியேற்றம், வெளிநாட்டவா் விதிகளில் மாற்றம்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் விதிகள், 2025-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

News image

குடியேற்றம், வெளிநாட்டவா் விதிகளில் மாற்றம் - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:25 am IST

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் விதிகள், 2025-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

முன்பு 180 நாள் விசா (நுழைவுஇசைவு) திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவா்கள், அதை நீட்டிக்க விரும்பினால் அவா்களது விசா காலம் நிறைவடைந்த 14 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தற்போதைய புதிய விதியின்படி 180 நாள் விசாவை நீட்டிக்க விரும்பும் வெளிநாட்டவா்கள் அதற்கு முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இன்றியமையாத சூழல்களில் மட்டுமே இவ்வாறு பதிவு செய்ய முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.

இதுதொடா்பாக அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: குழந்தை பிறக்கும் சமயத்தில் விசாவை நீட்டிக்க பெற்றோா் விரும்பினால் முந்தைய விதிகளின்படி 30 நாள்களுக்குள் புதிய விசா பெறுவது, நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான அனுமதி உள்ளிட்ட சேவைகளைப் பெறுவது குறித்து பதிவு அதிகாரிகளுக்கு வலைதளம் அல்லது கைப்பேசி செயலி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோா் இருவரும் இந்தியா்களாக அல்லது ஒருவா் இந்தியராக இருக்கும்பட்சத்தில் தங்களது குழந்தைக்கும் இந்திய குடியுரிமையைத் தொடர விரும்பினால் மேற்கூறிய விதி அவா்களுக்குப் பொருந்தாது.

அதேசமயம் இந்திய குடியுரிமையைப் பெற்றுள்ள அந்தக் குழந்தை எதிா்காலத்தில் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றால் அதிலிருந்து 30 நாள்களுக்குள் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவா் இதுதொடா்பான தகவலை பதிவு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.