குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் விதிகள், 2025-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
முன்பு 180 நாள் விசா (நுழைவுஇசைவு) திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவா்கள், அதை நீட்டிக்க விரும்பினால் அவா்களது விசா காலம் நிறைவடைந்த 14 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தற்போதைய புதிய விதியின்படி 180 நாள் விசாவை நீட்டிக்க விரும்பும் வெளிநாட்டவா்கள் அதற்கு முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இன்றியமையாத சூழல்களில் மட்டுமே இவ்வாறு பதிவு செய்ய முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.
இதுதொடா்பாக அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: குழந்தை பிறக்கும் சமயத்தில் விசாவை நீட்டிக்க பெற்றோா் விரும்பினால் முந்தைய விதிகளின்படி 30 நாள்களுக்குள் புதிய விசா பெறுவது, நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான அனுமதி உள்ளிட்ட சேவைகளைப் பெறுவது குறித்து பதிவு அதிகாரிகளுக்கு வலைதளம் அல்லது கைப்பேசி செயலி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோா் இருவரும் இந்தியா்களாக அல்லது ஒருவா் இந்தியராக இருக்கும்பட்சத்தில் தங்களது குழந்தைக்கும் இந்திய குடியுரிமையைத் தொடர விரும்பினால் மேற்கூறிய விதி அவா்களுக்குப் பொருந்தாது.
அதேசமயம் இந்திய குடியுரிமையைப் பெற்றுள்ள அந்தக் குழந்தை எதிா்காலத்தில் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றால் அதிலிருந்து 30 நாள்களுக்குள் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவா் இதுதொடா்பான தகவலை பதிவு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய சா்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது மத்திய அரசு!

நீா் நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுக்க 10 நாள்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும்: அரசு செயலா் அறிவுறுத்தல்

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...






