தண்டராம்பட்டு அருகே மர்ம விலங்கு கடித்ததில் 12 ஆடுகள் இறந்தன.
தண்டராம்பட்டை அடுத்த திம்மியம்பேட்டை கிராமம், குறவன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் (45). இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன் (35), ஏழுமலை (43). இவர்கள் அனைவரும் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான நிலம் காட்டுப் பகுதியோரம் உள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை விவசாயிகள் மூவரும் ஆடுகளை தங்களுக்குச் சொந்தமான பட்டிகளில் அடைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் பட்டிகளுக்குச் சென்றபோது, குப்பனுக்குச் சொந்தமான 6 ஆடுகள், ஏழுமலைக்குச் சொந்தமான 3 ஆடுகள், கண்ணனுக்குச் சொந்தமான 3 ஆடுகள் என மொத்தம் 12 ஆடுகள் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்தன.
பாதிக்கப்பட்ட மூவரும் தானிப்பாடி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். மேலும், தானிப்பாடி அரசு கால்நடை மருத்துவர் முத்துசாமி வந்து ஆடுகள் எப்படி இறந்தன என்பது குறித்து விசாரித்தார்.
இந்த நிலையில், காட்டில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது

ஸ்வாகதா தன் போராட்டத்தில் வெல்லட்டும்: ஜேம்ஸ் வசந்தன்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

