ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மர்ம விலங்கு கடித்து 12 ஆடுகள் சாவு

தண்டராம்பட்டு அருகே மர்ம விலங்கு கடித்ததில் 12 ஆடுகள் இறந்தன.

Updated On :21 மே 2018, 2:12 am

தண்டராம்பட்டு அருகே மர்ம விலங்கு கடித்ததில் 12 ஆடுகள் இறந்தன.
தண்டராம்பட்டை அடுத்த திம்மியம்பேட்டை கிராமம், குறவன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் (45). இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன் (35), ஏழுமலை (43). இவர்கள் அனைவரும் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான நிலம் காட்டுப் பகுதியோரம் உள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை விவசாயிகள் மூவரும் ஆடுகளை தங்களுக்குச் சொந்தமான பட்டிகளில் அடைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் பட்டிகளுக்குச் சென்றபோது, குப்பனுக்குச் சொந்தமான 6 ஆடுகள், ஏழுமலைக்குச் சொந்தமான 3 ஆடுகள், கண்ணனுக்குச் சொந்தமான 3 ஆடுகள் என மொத்தம் 12 ஆடுகள் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்தன.
பாதிக்கப்பட்ட மூவரும் தானிப்பாடி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். மேலும், தானிப்பாடி அரசு கால்நடை மருத்துவர் முத்துசாமி வந்து ஆடுகள் எப்படி இறந்தன என்பது குறித்து விசாரித்தார்.
இந்த நிலையில், காட்டில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.