செய்யாறு அருகே அடையாளம் தெரியாத பைக் மோதிய விபத்தில் துணி வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் நத்தம்பேட்டை நடுத் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் சுரேஷ். துணி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்களில் காஞ்சிபுரத்திலிருந்து உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக் அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டதாம். காயத்துடன் வீட்டுக்குச் சென்ற சுரேஷ் தூங்கிவிட்டாராம். மறுநாள் காலை அவரது மனைவி அவரை எழுப்பிய போது, மயக்க நிலையில் இருந்தாராம். உடனடியாக அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யனார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

