திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 3-ஆம் ஆண்டு படிக்க இடம் வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி பரிந்துரை செய்தார்.
தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமத்தில் அரசு வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, பி.எஸ்சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த சென்னையைச் சேர்ந்த மாணவிக்கு இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் தங்கபாண்டியன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தாராம். இந்தப் பிரச்னை குறித்து 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவியை திருச்சியில் உள்ள வேளாண் கல்லூரியில் சேருமாறு கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. குறிப்பிட்ட தேதிக்குள் திருச்சி கல்லூரியில் சேராததால், மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கி, பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி, மாணவியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும், மாணவி தொடர்ந்து கல்வி பயிலவும் ஏதுவாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில்
3-ஆம் ஆண்டு பி.எஸ்சி. வேளாண்மை படிக்க மாணவிக்கு இடம் வழங்குமாறு பல்கலைக்கழகத்துக்கு பரிந்துரை செய்தார். இதுதொடர்பான பரிந்துரைக் கடிதம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


