தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மீர் தாக்குதலில் வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம்

Updated On :25 பிப்ரவரி 2019, 8:44 am IST

காஷ்மீர் தாக்குதலில் வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திருவண்ணாமலை காந்தி சிலை பகுதியில் இருந்து காமராஜர் சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு புலவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சமயநெறி ஆசிரியர் சீனிவாச வரதன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் வரவேற்றார். தொடர்ந்து, அதன் நிர்வாகிகள் கருப்புப் பட்டை அணிந்து அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இறுதியாக, வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருக்குறள் தொண்டு மைய நிர்வாகிகள் வாசுதேவன், அம்பி, மாணிக்கம், வைத்தியலிங்கம், சண்முகம், சேதுமாதவன், அசோக்குமார், மகாதேவன், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.