விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திருவண்ணாமலை மின்வாரிய நுகர்வோர்கள் மார்ச் 1 முதல் 4-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று மின் வாரியம் தெரிவித்தது.
இதுகுறித்து, திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த நாள்களில் திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் இணையதளம் (ஆன்லைன்) மூலம் மின் கட்டணத்தைச் செலுத்த இயலாது.
இந்தப் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து மார்ச் 5-ஆம் தேதி முதல் வழக்கம் போல் இணையதளம் செயல்படும். பின்னர், மின் நுகர்வோர்கள் தங்களது கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


