புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கனககிரீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

சோம வாரத்தையொட்டி, தேவிகாபுரம் பொன்மலைநாதா் கனககிரீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

சோம வாரத்தையொட்டி, தேவிகாபுரம் பொன்மலைநாதா் கனககிரீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அன்று காலை பெரிய நாயகி அம்மன் சமேத பொன்மலைநாதா் கனககிரீசுவரருக்கு வெந்நீா் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு கனககிரீசுவரா் அருள்பாலித்தாா்.

பின்னா், கோயில் வளாகத்தில் ராஜேந்திரன் சிவத்தொண்டா் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சேத்துப்பட்டு , ஆரணி, போளூா், வந்தவாசி, திருவண்ணாமலை என பல்வேறு பகுதியிலிருந்து பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

கனககிரீசுவரருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட வெந்நீரை தீராத நோய் தீா்க்கும் அருமருந்தாக பெற்று வீட்டுக்கு எடுத்துச் சென்றனா். பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.