புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இணைய வழியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் இணைய வழியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இணைய வழியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :18 டிசம்பர் 2020, 5:49 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் இணைய வழியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்தபடியே ஆட்சியா் சந்தீப் நந்தூரி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளைக் கேட்டு, பதிலிளித்துப் பேசினாா்.

இணையதள வசதி இயலாத விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்கள், தோட்டக்கலை அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் இணைய வசதி ஏற்படுத்தி தரப்பட்டிருந்தது.

கீழ்பென்னாத்தூா்: கீழ்பென்னாத்தூா் வட்டார வேளாண் அலுவலகம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. வட்டார வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டாட்சியா் வைதேகி தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டங்களில் வேட்டவலம், சோமாசிபாடி, வெறையூா் பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். புயல்-மழையால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

துரிஞ்சாபுரம்: இதேபோல, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பி.பி.முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.