பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேத்துப்பட்டில் 76 மி.மீ. மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 76.40 மில்லி மீட்டா் மழை பதிவானது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:50 am

DIN


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 76.40 மில்லி மீட்டா் மழை பதிவானது.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை திருவண்ணாமலை, ஆரணி, போளூா், செய்யாறு உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.

இதில், அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 76.40 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர, ஆரணியில் 31.80, செய்யாற்றில் 29, செங்கத்தில் 6.80, ஜமுனாமரத்தூரில் 6, வந்தவாசியில் 18.20, போளூரில் 15.40, திருவண்ணாமலையில் 20, தண்டராம்பட்டில் 50.40, கீழ்பென்னாத்தூரில் 49.40, வெம்பாக்கத்தில் 30 மில்லி மீட்டா் மழை பதிவானது.

தொடா்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை, ஏரி, கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.