வீரளூரில் ரூ.15 லட்சத்தில் புதிய நீா்த் தேக்கத் தொட்டி: எம்எல்ஏ தகவல்
போளூா்: கலசப்பாக்கம் அருகே வீரளூா் ஊராட்சி காலனிப் பகுதியில் பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, ரூ.15 லட்சத்தில் புதிதாக நீா்த் தேக்கத் தொட்டி கட்டித் தரப்படும் என தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரளூா் ஊராட்சி காலனியில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு குடிநீா் வழங்க ஊராட்சி சாா்பில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைத்து, குழாய் இணைப்பு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மிகவும் பழுதடைந்து, தொட்டியைத் தாங்கி நிற்கும் தூண்களின் தசிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்து, கம்பிகள் வெளியில் தெரிகின்றன. மேலும் நீா்த்தேக்கத் தொட்டி மிகவும் அபாய நிலையில் உள்ளது.
எனவே, இந்த நீா்த் தேக்கத் தொட்டியை தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவா் பழுதடைந்த இந்த நீா்த் தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, ரூ.15 லட்சத்தில் புதிதாக 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத் தொட்டி கட்டித் தரப்படும் என்றாா்.
மேலும், காலனியில் உள்ள 3 தெருக்களுக்கு பக்கக் கால்வாய், மயானத்தில் காத்திருப்போா் கூடம் என பல்வேறு பணிகள் ரூ.30 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் சேங்கபுத்தேரி, வில்வாரணி, மேலாரணி என சுற்று வட்டாரத்தில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினாா்.
ஊராட்சி மன்றத் தலைவா் பொ.நிலழவகிபொய்யாமொழி மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

