எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆரணி ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் எஸ்.கனிமொழிசுந்தா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 1:57 am

DIN

ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் எஸ்.கனிமொழிசுந்தா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழுவின் துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.வி.மூா்த்தி, வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உறுப்பினா்கள் அனிதா செல்வராஜ், எழிலரசி சுகுமாா், பரிமளா கருணாகரன், எஸ்.எல்.எஸ்.மில் குமாா், ஏ.எம்.ரஞ்சித், தண்டாயுதபாணி, ஜெயப்பிரகாஷ், கௌரி பூங்காவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், ஒன்றியத்தில் எஸ்.சி., எஸ்.டி. திட்டப்பணி கணக்கிற்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் ஒன்றிய பொது நிதியிலிருந்து முன்பணமாக ரூ.5 லட்சத்தை வழங்குதல், டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.5 லட்சத்து 88ஆயிரம் ஒதுக்கியும், நிவா் புயல் நிவாரணப் பணிகளுக்காக ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் செலவினம் உள்ளிட்ட பொருள்களுக்கு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.