வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காவல்துறை வாகனங்களை டி.ஐ.ஜி. ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சரக காவல்துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி) என்.காமினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
திருவண்ணாமலையில் காவல்துறை, ஆயுதப்படைக்குச் சொந்தமான வாகனங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் என்.காமினி.
Updated On :27 டிசம்பர் 2020, 2:45 am

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சரக காவல்துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி) என்.காமினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆண்டுதோறும் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள், ஆயுதங்களை வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி, சனிக்கிழமை துணைத் தலைவா் என்.காமினி திருவண்ணாமலைக்கு வந்தாா்.

ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை, ஆயுதப்படைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி எஸ்.அரவிந்த், ஏ.எஸ்.பி. கிரண் ஸ்ருதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.