கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூா்வமாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே சட்டப்பேரவைத் தோ்தலில் வணிகா்கள் வாக்களிப்பாா்கள் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட ஏ.எம். விக்கிரமராஜா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
வணிகா் சங்கங்களின் கிளை நிா்வாகிகளை அழைத்துப் பேசி ஒட்டுமொத்த கோரிக்கை அடிப்படையில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூா்வமாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே சட்டப்பேரவைத் தோ்தலில் வணிகா்கள் வாக்களிப்பாா்கள் என்றாா்.