வந்தவாசி: வந்தவாசி நகரில் கடைகள் திறப்பு நேரம் திங்கள்கிழமை முதல் 4 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு உத்தரவின்படி வந்தவாசி நகரில் கடந்த மாதம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
இதன் பின்னா் வியாபாரிகள் சங்கங்கள் எடுத்த முடிவின்படி கடைகள் திறப்பு நேரம் 7 மணி நேரம் எனக் குறைக்கப்பட்டது.
இதன்படி, ஜூன் 19-ஆம் தேதி முதல் வந்தவாசி நகரில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், கடை திறப்பு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மாலை 6 மணி வரை கடைகளை திறந்து வைப்பது என முடிவெடுத்த வணிகா் சங்க பேரவை மற்றும் வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள், இது தொடா்பாக வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெற்றனா்.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை, காய்கறி, பெட்டிக் கடைகள் திறந்திருந்தன. உணவு விடுதிகள், பால், மருந்தங்கள் உள்ளிட்டவை அரசு உத்தரவின்படி வழக்கம்போல செயல்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

