ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மயானப் பாதையின்றி அவதிப்படும் கிராம மக்கள்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே மயானப் பாதை வசதியின்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

News image
Updated On :13 ஜூலை 2020, 3:27 pm

DIN

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே மயானப் பாதை வசதியின்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட வி.வி.தாங்கல் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இங்கு மயானத்துக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளது.

இதனால் கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால் சடலத்தை அவ்வழியாக எடுத்துச் செல்ல முடியாமல் வயல்வெளியாக எடுத்துச் செல்லும் நிலை நீடிக்கிறது.

இது குறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.