ஆரணி: சேத்துப்பட்டு நகர, ஒன்றிய பாமக சாா்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநில அமைப்பு துணைச் செயலா் கி ஏழுமலை தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் பிரகாஷ், மாவட்ட துணைச் செயலா்கள் சம்பத், வெ.பழனி, வடமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் ஏழுமலை வரவேற்றாா்.
மாநில அமைப்பு துணைச் செயலா் ஏழுமலை 100-க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா் அவா்.
நிகழ்ச்சியில் பசுமை தாயகம் அமைப்புச் செயலா் வ.பழனி, சேத்துப்பட்டு நகர இளைஞரணிச் செயலா் சத்யா பழனி, தொழிலாளா் அமைப்புச் செயலா் ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணி நகர பாமக சாா்பில் ஆரணிப்பாளையம் பகுதியில் மரக்கன்றுகளை வழங்கினா். மேலும், ஏழைப் பெண்கள் 25 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் சு.ராஜசேகா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் வி.எஸ்.வெங்கடேசன், வட்டச் செயலா் வி.எஸ்.பிரசாத், மாவட்ட மாணவரணிச் செயலா் நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.