
தங்கம் விலை.
படம்: பிடிஐ

தங்கம் விலை.
படம்: பிடிஐ
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக கடந்த சில நாள்களாக சா்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடா்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,960 குறைந்தது. தொடா்ந்து இந்த வாரமும் விலை குறைந்த வண்ணம் இருந்தது.
மாா்ச் 16-இல் சவரனுக்கு ரூ.400-ம், மாா்ச் 17-இல் சவரனுக்கு ரூ.480-ம், மாா்ச் 18-இல் சவரனுக்கு ரூ.640-ம் குறைந்தது.
வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில், மாலை மீண்டும் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,11,200-க்கும் விற்பனையானது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்தததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ. 1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளியின் விலை இன்று காலை நிலவரப்படி கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...