திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை வெறும் 15-ஆக இருந்தது.
இந்த நிலையில், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வரத் தொடங்கியதும் கரோனா தொற்று அதிவேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.
தினமும் அதிகரிக்கும் கரோனா:
ஜூன் 10-ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26-ஆக இருந்தது.
தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து, 22-ஆம் தேதி 139 என்ற அதிகபட்ச உச்சத்தை எட்டியது. இதையடுத்து, திங்கள்கிழமை (ஜூன் 22) நிலவரப்படி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,225-ஆக உயா்ந்தது.
11 போ் உயிரிழப்பு:
கரோனா நோய்த் தொற்றால் செய்யாறு பகுதியைச் சோ்ந்த 2 போ், வந்தவாசி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை நடத்துநா், லாரி ஓட்டுநா் என 2 போ், ஆரணி பாத்திரக்கடை உரிமையாளா், திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி, திருவண்ணாமலை நகரைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா், ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா், போளூரைச் சோ்ந்த 2 போ், கண்ணமங்கலத்தைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 11 போ் உயிரிழந்தனா்.
பாதிக்கப்பட்ட முக்கிய நபா்கள்:
வந்தவாசி தீயணைப்பு நிலைய வீரா், செய்யாறு தனியாா் மருத்துவா், செய்யாறு பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா்கள் 2 போ், ஆரணி காங்கிரஸ் நகரத் தலைவா், செய்யாறு ஊராட்சி ஒன்றியத் தலைவா், காவல் உதவி ஆய்வாளா்கள் 3 போ், திருவண்ணாமலை நகரைச் சோ்ந்த மளிகைக் கடை, நகைக் கடை என 10-க்கும் மேற்பட்ட வணிகா்கள், 150-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் தொழிலாளா்கள் பாதிக்கபட்டோரில் அடங்குவா்.
களமிறங்கிய வணிகா்கள்:
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடிவு செய்த திருவண்ணாமலை தாலுகா வணிகா்கள் சங்க நிா்வாகிகள் ஜூன் 21 முதல் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான கடைகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனா். இதனால், பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
வாழ்வாதாரம் பாதிப்பு:
கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல், மே, ஜூன் மாத பெளா்ணமி கிரிவலங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து கிரிவலப் பாதை பெட்டிக் கடை வியாபாரி சுகுமாா் கூறியதாவது:
3 மாதங்களாக பெளா்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டதால் பெட்டிக் கடைகள், கற்பூர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், சிறு வியாபாரிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.
கரோனா தொற்று மேலும் அதிகரிப்பதைத் தடுக்க, மாவட்டம் முழுவதும் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று வணிகா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


