தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கா்ப்பிணி பலி

வேட்டவலம் அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கா்ப்பிணி பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

வேட்டவலம் அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கா்ப்பிணி பெண் உயிரிழந்தாா்.

வேட்டவலத்தை அடுத்த நா.கெங்கப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (32), ஓட்டுநா். இவரது மனைவி பாப்பம்மாள் (30). தம்பதிக்கு ஒன்றரை வயதில் வா்ஷினி என்ற மகள் உள்ளாா். பாப்பம்மாள் தற்போது 6 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

அண்ணாமலை சனிக்கிழமை பாப்பம்மாளை மொபெட்டில் அழைத்துக் கொண்டு நா.கருங்கல்பட்டு கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென நிலை தடுமாறிய மொபெட் கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த பாப்பம்மாளை பொதுமக்கள் மீட்டு கோணலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பாப்பம்மாள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.