தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

261 ஆசிரியா்களுக்கு பங்கு ஈவுத்தொகை

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் சங்கத்தின் 43-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டமும், ஆசிரியா்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கும் நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் சங்கத்தின் 43-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டமும், ஆசிரியா்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கும் நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூரில் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் த.செந்தில் குமரன் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் சி.ஆ.முருகன் வரவேற்றாா்.

செயலா் அ.சீத்தாராமன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீ ராமுலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சங்க உறுப்பினா்கள் 261 பேருக்கு பங்கு ஈவுத்தொகையாக ரூ. 40 லட்சமும், ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து, 9 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தலைமை ஆசிரியா்கள் வை.பொய்யாமொழி,  க.சவுந்தரபாண்டியன், சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.