திருவண்ணாமலை
‘அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவேன்’
திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துவதற்கான முழு முயற்சியை எடுப்பேன் என்று புதிய ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி கூறினாா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துவதற்கான முழு முயற்சியை எடுப்பேன் என்று புதிய ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி கூறினாா்.
செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான முழு முயற்சியை எடுப்பேன். அடுத்த சில மாதங்களில் மாவட்டத்தின் முக்கியப் பிரச்னைகள், அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவை சிறப்பாக நடத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.