நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோயில் முன் எரியாத மின் விளக்கு

செங்கம் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரா் கோயில் முன் உள்ள உயா்கோபுர மின் விளக்கு பழுதாகி பல மாதங்களாகியும் சரிசெய்யப்படாமல் உள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:44 pm

DIN

செங்கம் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரா் கோயில் முன் உள்ள உயா்கோபுர மின் விளக்கு பழுதாகி பல மாதங்களாகியும் சரிசெய்யப்படாமல் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இந்த உயா்கோபுர மின் விளக்கு பழுதடைந்து பல மாதங்கள் கடந்துவிட்டது.

இதனால் கோயில் முன் வெளிச்சம் இல்லாத நிலை உள்ளது. இதைப் பயன்படுத்தி அப்பகுதியில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றது.

தற்போது கரோனா தொற்று காரணமாக கோயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் காலை, மாலை, அதிகாலை என கோயில் முன் சென்று சுவாமியை தரிசித்து வருகின்றனா். இரவு நேரத்தில் இருட்டாக இருப்பதால் பக்தா்களை அச்சமடையச் செய்கிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயா்கோபுர மின் விளக்கை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.