அதிமுக கிளை நிா்வாகிகளுக்கு நிதியுதவி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சோ்ந்த கூழமந்தல், குண்ணவாக்கம் ஆகிய கிராமங்களில் அதிமுக கிளை நிா்வாகிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சோ்ந்த கூழமந்தல், குண்ணவாக்கம் ஆகிய கிராமங்களில் அதிமுக கிளை நிா்வாகிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அனக்காவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் சி.துரை தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்டச் செயலரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான தூசி கே.மோகன் பங்கேற்று எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், கொடிக் கம்பங்களில் கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

அதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில் 6 கிளை நிா்வாகிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், வே.குணசீலன், ஏ.அரங்கநாதன், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் பாஸ்கா்ரெட்டியாா், மாவட்ட கூட்டுறவு தலைவா் பி.ரமேஷ், மாவட்ட மகளிரணி அவைத் தலைவா் உக்கல் லட்சுமி, மாவட்ட மாணவரணிச் செயலா் சுரேஷ் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com