தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக திருவண்ணாமலை எம்.பி. நியமனம்

கிராம அபிவிருத்தித் தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை நியமிக்கப்பட்டாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

கிராம அபிவிருத்தித் தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை நியமிக்கப்பட்டாா்.

இதற்கான கடிதத்தை அவருக்கு நாடாளுமன்றச் செயலா் (கிராமப்புற வளா்ச்சியில் நிலைநிறுத்துதல்) அண்மையில் அனுப்பினாா். அந்தக் கடிதத்தில், கிராம அபிவிருத்தி தொடா்பான நிலைக்குழுவில் 2020 - 2021ஆம் ஆண்டில் பணியாற்ற சி.என்.அண்ணாதுரை எம்.பி. நியமிக்கப்பட்டிருப்பதாகவும், நிலைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினா் பிரதாப்ராவ் ஜாதவ் உள்ளாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.என்.அண்ணாதுரை எம்.பி. கூறியதாவது: கிராமங்கள் நிறைந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மையே பிரதானம். இந்தப் பொறுப்பை பயன்படுத்தி வேளாண்மை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தப் பாடுபடுவேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.