தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசுத் துறை காலிப் பணியிடங்களைவிரைந்து நிரப்பக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமென்று தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமென்று தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது.

இந்த அமைப்பினா் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்றது. ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் ரா.செல்வபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் து.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் த.வெங்கடேசன், கௌரவத் தலைவா் கோ.சேகா், பள்ளிக் கல்வித் துறையைச் சோ்ந்த சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுந்தர்ராஜன் வரவேற்றாா். ஒன்றியத்தின் மாநிலச் செயலா் (செய்திப் பிரிவு) அ.ஜெய்சங்கா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகங்களிலும் ஏற்கெனவே நடைமுறையிலிருந்த நோ்முக உதவியாளா் (கணக்கு) என்ற பதவியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

அரசு ஊழியா்கள் அனைவருக்கும் ஒவ்வோா் ஆண்டும் கலந்தாய்வு முறையில் பணி மாறுதல்கள் வழங்க வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் புதிய மாவட்ட துணைத் தலைவா்களாக டி.சங்கா், ஏ.ரமேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இதில், தமிழ்நாடு குரூப் - 2 நேரடி நியமன அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆனந்தகுமாா், மாவட்டச் செயலா் சண்முகம், தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றிய வட்டக்கிளை பொறுப்பாளா்கள் அப்துல் ரகூப், துரைராஜ், முருகானந்தம், மஞ்சுளா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.