இதேபோல, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 28 ஆயிரம் போ் வேறு மாவட்டங்களிலுள்ள வங்கிகளிலிருந்து உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை பெற்றுள்ளனா். அவா்களது விவரத்தை கடலூா் மாவட்ட நிா்வாகம் பெற்று, வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடலூா் மாவட்டத்தில் சுமாா் 64 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.13 கோடி திரும்பப் பெற வேண்டியுள்ளது. இதுவரை ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூா் மாவட்ட விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.38 லட்சம் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை, வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனா் என்றாா்.