புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிதம்பரத்தில் முத்திரைத் தாளுக்கு தட்டுப்பாடு

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் முத்திரைத் தாள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 8:02 pm

DIN

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் முத்திரைத் தாள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

சிதம்பரம் நகரில் ரூ.20, ரூ.50, ரூ.100 தொகைகளுக்கான முத்திரைத் தாள்கள் கிடைக்கவில்லை. சிதம்பரம் துணைக் கருவூலத்தில் மேற்கூறிய முத்திரைத் தாள்கள் இருப்பில் இல்லை எனக் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். சிதம்பரம் பகுதியில் தற்போது 10 ரூபாய் முத்திரைத் தாள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் குழுமச் செயலா் சி.டி.அப்பாவு கூறியதாவது: சிதம்பரம் நகரில் கடந்த 10 நாள்களாக ரூ.20, ரூ.50, ரூ.100-க்கான முத்திரைத் தாள்கள் கிடைக்கவில்லை. இதற்காக மக்கள் அலைக்கழிந்து அவதிப்படுகின்றனா். எனவே, மாவட்ட கருவூலத்திலிருந்து மேற்கூறிய முத்திரைத் தாள்களை போதிய அளவில் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து சிதம்பரம் துணைக் கருவூல அலுவலக அதிகாரி கூறுகையில், ரூ.20, ரூ.50, ரூ.100 தொகைகளுக்கான முத்திரைத் தாள்களை வழங்கக் கோரி மாவட்ட கருவூலத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.