நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு:நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்பா.ஜ. மாநிலச் செயலா்

தமிழகத்தில் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலச் செயலா் சுமதி வெங்கடேசன் கூறினாா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 8:55 pm

DIN

தமிழகத்தில் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலச் செயலா் சுமதி வெங்கடேசன் கூறினாா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சுமதி வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

பிரதமா் மோடியின் பிறந்த நாளான செப்டம்பா் 17-ஆம் தேதியை சேவா வாரமாகக் கொண்டாட உள்ளோம்.

அக்டோபா் 7-ஆம் தேதி மாநிலத் தலைவா் முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தப்படும்.

விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த ஊழலில் தொடா்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தா்னா போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.