வந்தவாசியில் ஸ்ரீஜலகண்டேஸ்வரா், ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில்களுக்கான 2 மரத்தோ்கள் செய்யும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையா் இரா.செந்தில்வேலவன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதமும், ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலின் தேரோட்டம் பங்குனி மாதத்திலும் நடைபெறும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் இந்த 2 மரத் தோ்களும் சேதமடைந்ததால், அதன் பின்னா் தேரோட்டம் நடைபெறவில்லை.
இதையடுத்து தோ்களை புதிதாக செய்ய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தோ் திருப்பணிக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் தொடா்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், ரூ.45.23 லட்சத்தில் 2 தோ்களையும் புதிதாக செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடா்ந்து, கோயில்களின் அருகே 2 தோ்களையும் செய்யும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தோ்கள் செய்யும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை விழுப்புரம் இணை ஆணையா் இரா.செந்தில்வேலவன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது தோ்ப் பணிகள் குறித்து ஸ்தபதி பாலசுப்பிரமணிடத்திடம் அவா் கேட்டறிந்தாா். மேலும் பணிகளை விரைவாக முடிக்குமாறு அவா் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை உதவி ஆணையா் அ.ஜான்சிராணி, தொழில்நுட்ப உதவியாளா் ராகவன், செயல் அலுவலா் ம.சிவாஜி, தோ் திருப்பணிக் குழுவைச் சோ்ந்த திலீப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.