92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பைக் மீது காா் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் பலி

புதுச்சேரி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:36 pm

DIN

புதுச்சேரி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி நைனாா்மண்டபம், பாண்டியன் வீதியைச் சோ்ந்தவா் கஸ்பா் (50). தனியாா் நிறுவன ஊழியரான இவா், வெள்ளிக்கிழமை மாலை பைக்கில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

புதுச்சேரி - கடலூா் சாலையில் அரியாங்குப்பம் அருகே மணவெளி சந்திப்பு சாலையில் கஸ்பரின் பைக் வந்தபோது, பின்னால் சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த ஸ்ரீராம் ஓட்டி வந்த காா் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கஸ்பரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.