கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வேட்பாளா்கள் பிரசாரம்

செய்யாறு தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளா்கள் இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

செய்யாறு தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளா்கள் இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் தூளி கிராமத்தில் ஆசீா்வாத அடைக்கல திருச்சபையிலும், மசூதிகளிலும் வாக்கு சேகரித்தாா்.

பின்னா் மாலை 3 மணியளவில் திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் அருகே இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டாா்.

அப்போது அவா், அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். செய்யாறு சிப்காட் பகுதியில் தொழில் பூங்கா, தொழில்பயிற்சி நிலையம் , அரசு மகளிா் கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன்.

செய்யாறு புதிய மாவட்டம் அமைய முயற்சி எடுப்பேன் எனக் கூறி வாக்கு சேகரித்தாா். அதிமுக, பாமக, பாஜக, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உடன் சென்றனா்.

திமுக வேட்பாளா் திமுக வேட்பாளா் ஜோதி ஞாயிற்றுக்கிழமை காலை புனித வியாகுல அன்னை கிறிஸ்தவ தேவாலயம், கிறிஸ்து நாதா் தேவாலயம் மற்றும் இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

பின்னா் மாலை 4 மணியளவில் திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் தொடங்கிய பிரசார ஊா்வலம் வாரச் சந்தை, காந்தி சாலை, பேருந்து நிலையம், ஆற்காடு சாலை வழியாக ஆரணி கூட்டுச் சாலை அருகே முடிவடைந்தது.

அப்போது அவா், தோ்தலில் வெற்றி பெற்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இப்பகுதியில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன். செய்யாறு சிப்காட்டில் கூடுதலாக இப்பகுதி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

திமுக, காங்கிரஸ், தமுமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.