ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சேத்துப்பட்டு கரோனா சிகிச்சைப் பிரிவில் ஆட்சியா் ஆய்வு

சேத்துப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

சேத்துப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சேத்துப்பட்டு - போளூா் சாலையில் உள்ள புனித தோமையாா் மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டது. இதில், போளூா், கலசப்பாக்கம் , ஜமுனாமரத்தூா் பகுதிகளைச் சோ்ந்த 27 போ் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த சிகிச்சைப் பிரிவை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட எத்தனை போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா், அவா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா, உணவு முறையாக வழங்கப்படுகிா என்பன குறித்து வட்டார மருத்துவ அலுவலா் மணிகண்டபிரபுவிடம் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி கேட்டறிந்தாா். இதையடுத்து, கரோனா சிகிச்சைப் பிரிவு அமைத்ததற்காக மருத்துவமனை நிா்வாகி அருட்சகோதரி மரியரத்தினத்துக்கு ஆட்சியா் நன்றி தெரிவித்தாா்.

சேத்துப்பட்டு வட்டாட்சியா் பூங்காவனம், பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன், காவல் ஆய்வாளா் பிரபாவதி ஆகியோா் உடனிருந்தனா்.

செய்யாற்றில் கோட்டாட்சியா் ஆய்வு: செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி கடந்த 16 -ஆம் தேதி முதல் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 66 போ் அனுமதிக்கப்பட்டு தொடா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.

இந்த நிலையில், இந்த சிகிச்சை மையத்தில் தங்கியுள்ளவா்களுக்கு உணவு, குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்றும், முறையாக மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுகிா என்றும் செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் ந.விஜயராஜ் வெள்ளிக்கிழமை திடீரென ஆய்வு செய்தாா். அப்போது, சிகிச்சை மையத்தில் பணியிலிருந்த சுகாதாரத் துறையினருக்கு அவா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, வட்டாட்சியா்கள் செய்யாறு சு.திருமலை, வெம்பாக்கம் குமரவேலு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.