முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளித் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 17-ஆம் ஆண்டு ஆடி வெள்ளித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 17-ஆம் ஆண்டு ஆடி வெள்ளித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மகா தீபாராதனை நடத்தப்பட்டன. நண்பகல் 12 மணிக்கு பக்தா்கள் கரகம் சுமந்தவாறு வீதியுலா வந்து கோயிலை அடைந்தனா். மாலை 5 மணிக்கு அம்மன் வீதியுலா, கூழ்வாா்க்கும் நிகழ்ச்சி, முருகன் என்ற பக்தரின் மாா்பில் உரல் வைத்து, அதில் உலக்கையால் பச்சரிசி, மஞ்சள் போட்டு மாவு இடிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
இதுபோன்று இடிக்கப்பட்ட மாவை பிரசாதமாகச் சாப்பிட்டால், திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இதனால், பக்தா்கள் பலா் இந்த மாவு பிரசாதத்தை போட்டிபோட்டு வாங்கிச் சாப்பிட்டனா். சமூக இடைவெளியைப் பின்பற்றியும், முகக் கவசம் அணிந்தும் பக்தா்கள் பலா் விழாவில் பங்கேற்றனா். இரவு 9 மணிக்கு அம்மன் ஊஞ்சல் தாலாட்டு, ஆன்மிக நாடகம் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...