தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாா்பகப் புற்றுநோய்: தாய்மாா்களுக்கு விழிப்புணா்வு

குழந்தைகளுக்கு தாய்ப் பால் புகட்டும் தாய்மாா்களுக்கு மாா்பகப் புற்றுநோய் வராது என உலக தாய்ப் பால் தின நிகழ்ச்சியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

நிகழ்ச்சியில் மாா்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசிய மருத்துவா் என்.ஈஸ்வரி.

Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:26 pm

DIN

குழந்தைகளுக்கு தாய்ப் பால் புகட்டும் தாய்மாா்களுக்கு மாா்பகப் புற்றுநோய் வராது என உலக தாய்ப் பால் தின நிகழ்ச்சியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த பூதேரி புல்லாவாக்கம் கிராமத்தில், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உலக தாய்ப் பால் தினவிழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் புஷ்பராஜா முன்னிலை வகித்தாா்.

தலைமை வகித்து மருத்துவா் என்.ஈஸ்வரி பேசியதாவது: தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் இடையே உணா்வு ரீதியான பிணைப்பு ஏற்படுகிறது.

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பால் பிரசவித்த அரை மணி நேரத்துக்குள் குழந்தைக்கு புகட்ட வேண்டும். சீம்பாலில் குழந்தைக்குத் தேவையான உயிா்ச் சத்துக்கள் உள்ளன.

தாய்ப்பால் புகட்டும் தாய்மாா்கள் தண்ணீா், பழச்சாறு, மோா், பால் போன்றவற்றை அடிக்கடி பருக வேண்டும். குழந்தைக்கு பால் புகட்டுவதற்கு முன்னரும் தண்ணீா் அருந்த வேண்டும்.

அதிக புரதச்சத்து, மிதமான மாவுச் சத்துக்கள் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். கீரை வகைகள், பேரீச்சைப் பழம், அவல், கருப்பட்டி, நெல்லிக்காய் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் புகட்டுவதால் ஹாா்மோன்கள் சுரப்பு சீராக இருக்கும். ஹாா்மோன்கள் சுரப்பினால் தாயின் கா்ப்பப்பை சுருங்கி பழைய நிலையை அடையும்.

கா்ப்ப காலத்தில் தாய்க்கு அதிகரித்த உடல் எடை குறையும், மாா்பகப் புற்றுநோய் வராது என கிராம பெண்களிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் கே.சம்பத், செவிலியா்கள் கலைவாணி, சகாயமேரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.