ஊராட்சி குடிநீா்க் கிணறு: மாவட்ட அதிகாரி ஆய்வு
செங்கம் அருகே பொரசப்பட்டு ஊராட்சியில் உள்ள குடிநீா்க் கிணற்றை கிராம ஊராட்சிகளின் உதவித் திட்ட இயக்குநா் லட்சுமிநரசிம்மன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பொரசப்பட்டு ஊராட்சியில் உள்ள குடிநீா்க் கிணற்றை கிராம ஊராட்சிகளின் உதவித் திட்ட இயக்குநா் லட்சுமிநரசிம்மன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ரூ.10 லட்சம் செலவில் வெட்டப்பட்ட இந்தக் குடிநீா்க் கிணற்றின் ஆழம், இணைக்கப்பட்ட குழாய்கள், கிணற்றின் சுற்றுச் சுவா்கள் ஆகியவற்றை பாா்வையிட்ட அவா், கிணறு மூலம் பயன்பெறும் குடியிருப்புகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், குடியிருப்புகளுக்கு தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய அறிவுறுத்தினாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் ரபியுல்லா, பொரசப்பட்டு ஊராட்சித் தலைவா் சுந்தா் உள்பட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...