செய்யாற்றில் தமுமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 102 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமுமுக, செய்யாறு நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இந்த முகாமில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிா்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி, மகளிா் அணி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 102 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்