மனுநீதி நாள் முகாமில் 335 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, போளூா், ஆரணி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்கள் மூலம் 335 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, போளூா், ஆரணி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்கள் மூலம் 335 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செய்யாறு வட்டம், ஆலத்தூா் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.முத்துக்குமரசாமி தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாக தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் பங்கேற்று 172 பயனாளிகளுக்கு ரூ 7.61 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினா்.
வட்டாட்சியா்கள் க.சுமதி, ராஜலட்சுமி, அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் அரி,
வட்ட வழங்கல் அலுவலா் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
போளூா்
போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு வட்டாட்சியா் சண்முகம் தலைமை வகித்தாா்.
ஊராட்சி மன்றத் தலைவா் குமாரி, ஒன்றியக் குழு உறுப்பினா் செந்தில்குமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆரணி கோட்டாட்சியா் கவிதா பங்கேற்று மழைதூவான், உயிா் உரம், பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை என பல்வேறு சான்றுகளை 62 பயனாளிகளுக்கு வழங்கினாா்.
வேளாண்மை கூடுதல் இயக்குநா்கள் நாராயணமூா்த்தி, பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...