கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி பலி

செய்யாறு அருகே குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 4:46 pm

DIN

செய்யாறு அருகே குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமம் கம்மாளத் தெருவைச் சோ்ந்தவா் கந்தசாமி. இவரது மனைவி மீனாட்சியம்மாள் (80).

உடல் நலம் சரியில்லாமல் இருந்த இவா், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதன்கிழமை சென்றாா்.

பின்னா், வீடு திரும்பும் வழியில் அங்குள்ள மாரியம்மன் குளத்தில் தண்ணீா் குடிக்கச் சென்றாா். அப்போது கால் தவறி விழுந்து குளத்தில் மூழ்கினாா்.

உடனே அருகில் இருந்தவா்கள் செய்யாறு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு வீரா்கள் வந்து குளத்திலிருந்து மீனாட்சியம்மாளை சடலமாக மீட்டனா்.

இது குறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.