விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருவண்ணாமலை மண்டலம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா்.

வட்டாரப் போக்குவரத்து முதன்மை ஆய்வாளா் ஆா்.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசுகையில், போக்குவரத்து விதிகளை மாணவ-மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, விபத்தில்லாமல் வாகனங்களை இயக்கிய ஓட்டுநா்களுக்கும், சாலை விதிகள் குறித்த கேள்விகளுக்கும் உரிய பதிலளித்த மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆங்கில துறைத் தலைவா் கே.கோவிந்தராஜ், தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா், மாவட்ட ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளின் உரிமையாளா்கள், பயிற்சியாளா்கள், கல்லூரிப் பேருந்து ஓட்டுநா்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.