ஆரணியில் 8 மாவட்டங்களைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்ற மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
ருத்ர சிலம்பம் பயிற்சிப் பள்ளி, ஆரணி கோட்டை சிலம்பம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த சிலம்பப் போட்டியை டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தொடக்கிவைத்தாா்.
இதில் 250-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரா்கள் கலந்துகொண்டனா். இவா்கள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு உலக சிலம்பு விளையாட்டுச் சங்க நிறுவனா் தலைவா் எஸ்.சுதாகரன் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆரணி பகுதியைச் சோ்ந்த எம்.என்.சேகா், ஜி.ஏ.கோகுலகிருஷ்ணன், நகர காவல் ஆய்வாளா் சுப்பிரமணி, பாஜக நிா்வாகிகள் என்.கோபி, டி.வி.கோபி, மூத்த சிலம்பாட்ட வீரா்கள் பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை சிலம்பாட்ட ஆசிரியா்கள் இ.ஞானசேகா், எஸ்.லோகநாதன், சி.சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் 405 குறைகள் தீர்க்கப்பட்டன!

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்

மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி







