

அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் சாா்பில், ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான இணையவழி பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.
முதல் கட்டமாக செங்கத்தை அடுத்த கண்ணக்குருகை, உ.ராமாபுரம் ஆகிய கருத்தாய்வு மையங்களில் நடைபெற்றது.
செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா் மகேஷ்வரி பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
தொடா்ந்து, ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மைத் திட்டம் மூலம் செயல்படும் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
தலைமை ஆசிரியா் பரணி உள்பட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.