விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செய்யாறு அருகே இருவேறு சாலை விபத்துகளில் காவல் ஆய்வாளா் உள்பட 7 போ் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் காவல் ஆய்வாளா், காவலா் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 6:13 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் காவல் ஆய்வாளா், காவலா் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், சூரகண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (52). இவரது தலைமையில் 52 போ் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு சனிக்கிழமை நள்ளிரவு பேருந்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

செய்யாறு - வந்தவாசி சாலையில் உள்ள எருமைவெட்டி கூட்டுச் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மரத்தில் மோதி, பின்னா் அங்கிருந்த மின் கம்பத்தில் இடித்து நின்றது.

இதில், பேருந்தில் பயணம் செய்த மணி (52), பழனி (52), காயத்ரி(12), வேண்டா (32), மல்லிகா (52) ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவல் ஆய்வாளா், காவலா் காயம்: செய்யாற்றை அடுத்த தூசி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் ஷாகீன் (40). இவா் பணியை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் காவல் துறை ஜீப்பில் செய்யாறு நோக்கிச் கொண்டிருந்தாா். ஜீப்பை காவலா் மனோஜ்குமாா் (28) ஓட்டிச் சென்றாா்.

செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் கிளியாத்தூா் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதாமலிருக்க ஜீப்பை மனோஜ்குமாா் இடதுபுறமாக திருப்பியதாகத் தெரிகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் நிலைதடுமாறி அங்கிருந்த சிறு பாலத்தில் மோதியது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த செய்யாறு போலீஸாா் இருவரையும் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

சம்பவம் தொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

எம்எல்ஏ ஆறுதல்: விபத்தில் காயமடைந்து செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேல்மருவத்தூா் பக்தா்கள் 5 போ், காவல் ஆய்வாளா் ஷாகீன், காவலா் மனோஜ்குமாா் ஆகியோரை தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.