பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வு! பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வுக்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Plus 2 public exams begin

பிளஸ் 2 மாணவிகள். - DPS

Published On :4 மார்ச் 2026, 1:54 pm IST

கோவை: இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

அறிவியல் கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்குவதற்காக நாட்டின் 7 இடங்களில் (பெர்ஹாம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புணே, திருவனந்தபுரம், திருப்பதி) ஐஐஎஸ்இஆர் நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின்றன. 5 ஆண்டு பிஎஸ்எம்எஸ், 4 ஆண்டு பிஎஸ், பிடெக் படிப்புகளை வழங்கும் இந்த நிறுவனங்களில் சேருவ தற்கு பிரத்யேக நுழைவுத் தேர்வு (ஐஏடி) எழுத வேண்டும்.

பிளஸ் 2 முடித்தவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகியவற்றில் குறைந்தது 3 பாடங்களைப் படித்திருப்பவர்கள் இந்தத் தேர்வு எழுதத் தகுதியா னவர்கள். நுழைவுத் தேர்வு ஜூன் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தேர்வுக்கு மார்ச் 5-ஆம் தேதி முதல் இணையவழி யில் விண்ணப்பிக்கலாம்.

ஏப்.13-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 24-இல் வெளியிடப்படுகிறது. மேலும் விவரங் களுக்கு https://www.iiseradmission.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.