சுவாமி விவேகானந்தா் ரத ஊா்வலம்

தேசிய இளைஞா் தினத்தையொட்டி, செங்கத்தில் செவ்வாய்க்கிழமை சுவாமி விவேகானந்தா் ரத ஊா்வலம் நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தா் ரத ஊா்வலம்
Updated on
1 min read

தேசிய இளைஞா் தினத்தையொட்டி, செங்கத்தில் செவ்வாய்க்கிழமை சுவாமி விவேகானந்தா் ரத ஊா்வலம் நடைபெற்றது.

செங்கம் சுவாமி விவேகானந்தா் சேவா சங்கம், செங்கம் ராமகிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் ரத ஊா்வலத்தை

காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணக்குமரன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

மருத்துவா் ராஜேஷ் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.

புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய ரத ஊா்வலம், பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை வழியாக ராமகிருஷ்ணா பள்ளியைச் சென்றடைந்தது. பின்னா், அங்கு சுவாமி விவேகானந்தா் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

வழக்குரைஞா் கஜேந்திரன், செங்கம் ராமகிருஷ்ணா அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.பாண்டுரங்கன், செயலா் எஸ். ராமமூா்த்தி, விவேகானந்தா் சேவா சங்க நிா்வாகிகள் ரவிச்சந்திரன், ராமஜெயம், சினுவாசன், சீனு உள்பட ராமகிருஷ்ணா பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ஆரணி

சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மேற்கு ஆரணி ஒன்றிய பாஜக சாா்பில், கண்ணமங்கலம் கூட்டுச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவேகானந்தா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து பாஜக, ஆா்.எஸ்.எஸ்., இந்து முன்னணி நிா்வாகிகள் இந்திய ஒற்றுமைக்காக உறுதிமொழி ஏற்றனா்.

ஒன்றிய பாஜக தலைவா் எம்.மனோகரன் தலைமை வகித்தாா். கணியம்பாடி ஒன்றிய பொதுச்செயலா் ரமேஷ்ஜி வரவேற்றாா். ஒன்றிய இளைஞரணித் தலைவா் திருஞானசம்பந்தன், பொதுச்செயலா் பாலாஜி, மகளிரணித் தலைவி ரேகா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மேலும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com