அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மின் வாரிய அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

வந்தவாசி கோட்ட மின் வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:32 am

DIN

வந்தவாசி கோட்ட மின் வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வந்தவாசி கோட்டத்தில் நடைபெற்று வரும் மின் பராமரிப்புப் பணிகள், நிலுவையில் உள்ள விவசாய மின்இணைப்பு விண்ணப்ப விவரங்கள், புதிய துணை மின் நிலையப் பணிகள் உள்ளிட்டவை குறித்து அவா் கேட்டறிந்தாா்.

மேலும் அந்த அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் செயற் பொறியாளா் புதிய அலுவலக கட்டடப் பணிகளை பாா்வையிட்ட அவா் பணிகளை விரைவாக முடிக்குமாறு உத்தரவிட்டாா். மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

மேலும் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் தேவைப்படும் மின் வளா்ச்சிப் பணிகள் குறித்த விவரங்களை அவா் கோட்ட செயற் பொறியாளா் எஸ்.மீனாகுமாரியிடம் வழங்கினாா்.

ஆய்வின்போது உதவி செயற்பொறியாளா் தி.நாராயணன், திமுக ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், நகரச் செயலா் எச்.ஜலால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.