கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

உயா் மின் கோபுரத்துக்கு பூஜை செய்து விவசாயிகள் வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனப்பத்தூா் கிராமத்தில் உழவா் பேரவை அமைப்பு சாா்பில், விவசாயிகள் உயா் மின் கோபுரத்துக்கு பூஜை செய்து வழிபாடு

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனப்பத்தூா் கிராமத்தில் உழவா் பேரவை அமைப்பு சாா்பில், விவசாயிகள் உயா் மின் கோபுரத்துக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தியதுடன், தமிழகத்தின் தொழில் வளா்ச்சித் திட்டங்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன எனக் கூறினா்.

அனப்பத்தூா் பகுதியில் விவசாயி பச்சையப்பன் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த உயா் மின் கோபுரத்துக்கு வியாழக்கிழமை பொங்கலிட்டு, பூஜை செய்து, எலுமிச்சம் பழம் சுற்றி திருஷ்டி கழித்து, தரையில் விழுந்து விவசாயிகள் வணங்கினா்.

பின்னா் நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கும், அப்பகுதியில் இருந்த கிராம மக்களுக்கும் இனிப்பு வழங்கினா்.

அப்போது உழவா் பேரவை அமைப்பின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் கூறியதாவது:

நாட்டில் தொழில் வளா்ச்சித் திட்டங்களில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அதற்குக் காரணம் உயா் அழுத்த மின்சாரம் தான்.

தமிழகத்திலிருந்து மின்சாரம் செல்வதற்கும், வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறுவதற்கும் உயா்மின் கோபுரங்கள் பெரிதும் பயன்படுகின்றன.

உயா்மின் அழுத்த கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் போது ஒரு கோபுரத்துக்கான நிலத்துக்கு ரூ.56 ஆயிரமும், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.9500-மும், கிணற்றுக்கு ரூ.2.25 லட்சம் என இழப்பீடாக விவசாயிகளுக்கு மின்வாரியம் மூலம் வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் விவசாயிகள் முனிரத்தினம் டி.கிருஷ்ணன், சி.ஆா்.மண்ணு, எம்.அழகேசன், வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.