கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பந்துவீச்சை நினைத்து இனி எதிரணிகள் அஞ்சாது: அஸ்வின்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை நினைத்து எதிரணிகள் அஞ்சாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப் படம்

படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)

Updated On :21 மார்ச் 2026, 4:28 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை நினைத்து எதிரணிகள் இனி அஞ்சாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே வீரர்கள் பலரும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி வருகின்றனர். ஒரு சிலர் தொடரிலிருந்து முழுமையாகவும், ஒரு சிலர் பகுதியளவும் விலகியுள்ளனர். குறிப்பாக, காயம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்றே கூறலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். மதீஷா பதிரானா தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாடமாட்டார் எனவும், ஆகாஷ் தீப் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிந்து விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மானும் இல்லை.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

இந்த நிலையில், முன்பிருந்த அளவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு வலுவாக இல்லை எனவும், அந்த அணியின் பந்துவீச்சை நினைத்து எதிரணிகள் இனி அச்சப்படாது எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை நினைத்து எதிரணிகள் அச்சப்படுவார்கள் என நான் நினைக்கவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிஸ்டிரி பந்துவீச்சு, அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சு தற்போது எதிரணிகளுக்கு பிரச்னையாக இருக்காது என நினைக்கிறேன்.

முன்னதாக, பேட்டர்கள் மிஸ்டிரி பந்துவீச்சை எப்படி திறம்பட எதிர்கொள்வது என திட்டமிடுவார்கள் அல்லது மிஸ்டிரி சுழற்பந்துவீச்சில் பவுண்டரிகளுக்கு முயற்சிக்காமல் ஒரு ரன், இரண்டு ரன்கள் எடுப்பார்கள். ஆனால், தற்போது மிஸ்டிரி சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்த பயம் பேட்டர்களிடம் இல்லை.

வருண் சக்கரவர்த்தி அவருடைய பந்துவீச்சு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இது போன்ற சூழல் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கிரிக்கெட் பயணத்திலும் இருப்பது இயல்பு. முன்பு வேகமாக பந்துவீசிய அளவுக்கு சுனில் நரைன் தற்போது பந்துவீசுவதில்லை. ஈடன் கார்டன்ஸ் சிறிய திடல். அதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை நினைத்து அச்சப்படாமல் எதிரணிகள் அதிரடியாக விளையாட தயாராக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.