இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கு அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது அவர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், இளம் வீரர்கள் பலருக்கும் ஊக்கமளிப்பவராக விராட் கோலி இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஃபீல்டிங்கில் விராட் கோலியின் ஆர்வத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது. பவர் பிளேவில் அவர் எப்படி ஒரு பேட்டராக சிறப்பாக செயல்படுகிறாரோ, அதேபோல ஃபீல்டிங்கில் டைவ் அடித்து கேட்ச்சுகளை அற்புதமாக பிடிப்பார். கடந்த தொடரிலும் அவர் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். இந்த வயதிலும் அவர் மிகவும் வேகமாக ஓடி பந்துகளை தடுக்கிறார். பந்துகள் அவரிடம் நெருங்குவதற்கு முன்பே வேகமாக ஓடி சிறப்பாக தடுப்பார் என்றார்.
இந்திய கிரிக்கெட்டின் சிறந்த ஃபீல்டர்களில் விராட் கோலியும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகள் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 336 கேட்ச்சுகளுக்கும் அதிகமாக பிடித்துள்ளார். முன்னதாக, இந்த வரிசையில் ராகுல் டிராவிட் முதலிடத்தில் இருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகள் பிடித்த முன்னாள் வீரர் முகமது அசாரூதினின் சாதனையையும் விராட் கோலி விட்டுவைக்கவில்லை.
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 156 கேட்ச்சுகளுக்கும் அதிகமாக பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Indian team's former fielding coach has heaped praise on senior player Virat Kohli.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஜிங்க்யா ரஹானேதான் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர்: விராட் கோலி

ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு!

சர்வதேசப் போட்டிகளில் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை புதிய சாதனை!
233 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா: விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா் அரை சதம்
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly




