FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

சிஎஸ்கே அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகும் மெக்கல்லம்? சூசகமாக அறிவிப்பு!

சிஎஸ்கே அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் மெக்கல்லம் குறித்து...

News image

பிரண்டன் மெக்கல்லம் - AFP

Updated On :11 ஆகஸ்ட் 2026, 4:17 pm IST

சிஎஸ்கே அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரரும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளருமான பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தனது ராஜிநாமாவை அறிவித்ததால், புதிய பயிற்சியாளருக்குகான தேடலில் சிஎஸ்கே அணி இறங்கியுள்ளது.

ஃபிளெமிங்கிற்குப் பிறகு பலரது பெயரும் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. எம்.எஸ். தோனியேகூட இந்தப் பதவிக்கு வரலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரண்டன் மெக்கல்லம் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இவர் இங்கிலாந்தின் டெஸ்ட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக, பிளெமிங் நியமிக்கப்பட்டார்.

மெக்கல்லம் ஏற்கெனவே சிஎஸ்கே அணியில் விளையாடி இருக்கிறார். இவரது அதிரடியான பேட்டிங் சிஎஸ்கே அணிக்கு உதவியாக இருந்தது. அவரது தலைமைப் பண்பும் அதிரடியாகவே இருப்பது கவனிக்கத்தக்கது.

இங்கிலாந்தில் ’பேஸ் பால்’ என இவரது தலைமைப் பண்பு பாராட்டப்பட்டது. ஆனால், டெஸ்ட்ட்டில் அந்தளவுக்கு வெற்றி பெறாததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Will Brandon McCullum become the head coach of the CSK team? Expectations are soaring!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.